Showing posts with label சாது ஐயா. Show all posts

எனது பார்வையில் சாது ஐயா

சாது  ஐயா இவரை பற்றி பல விமர்சனங்கள் இணையத்தில் உள்ளது .ஆனால் எனக்கு அதில் ஒன்றும் உடன்பாடு இல்லை நான் 2009 இல்  இலங்கையில் இருந்தபோது எனது  குடும்ப   பொருளாதார நிலை காரணமாகவும் இலங்கையில்  யுத்தம் கடுமையாக  இருந்தமையாலும் என்னை வெகுவாக பாதித்தது .இந்த  நிலையில் பல  தொலைகாட்சில் வரும் அனைத்து  கிறிஸ்தவ நிகழ்சிகளை பார்ப்பேன். அதில் வரும் சகல ஊழியகாரரின் மினஞ்சல்  முகவரியை  குறித்து கொள்வேன் பின்னர் எனது நிலமையை விளக்கி எனக்காக செபிக்கும்படி    மினஞ்சல்  அனுப்புவேன். ஆனால் பெரும்  பாலான  ஊழியகார் எனக்கு  பதில் மினஞ்சல்  அனுப்பதால்  நான் ஏமாந்து  போனது உண்டு ஆனால் சாது  ஐயா மட்டும் பதில் அனுப்புவதுடன் ஆறுதல் செய்தியுடன் தான் செபித்த செபத்தையும் அனுப்பி என்னையும் செபிக்க சொல்லுவார்.இதனால் நான் பெரிதும் தேற்றபட்டதுடன். செபிக்கவும் கற்று பல பரலோக அனுபவ்களை பெற்று கொண்டதுடன் இன்று பலருக்கு
ஆசீர்வாதமாக  உள்ளேன்.இவரை தந்தமைக்கு தேவனுக்கு ஸ்த்திரம்